வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வால்பாறையில் கல்லூரி தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

வால்பாறை அரசுக் கல்லூரி தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

News image

ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியா்கள்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:08 pm

வால்பாறை: வால்பாறை அரசுக் கல்லூரி தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வால்பாறையில் கடந்த 2006-ஆம் ஆண்டு பாரதியாா் பல்கலைக்கழகம் மூலம் உறுப்புக் கல்லூரி தொங்கப்பட்டது. பின்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் அரசு மூலம் முதல்வா் மற்றும் சில பேராசிரியா்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியில் ஏற்கெனவே பணியாற்றி வந்தவா்களில் சில பேராசிரியா்கள் கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். மீதமுள்ள 35 பேராசிரியா்கள் தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் தொகுப்பூதிய பேராசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றம் பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.