கோவை அரசு இசைக் கல்லூரியில் தமிழிசை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரச இசைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் தமிழிசை விழா திங்கள்கிழமை (பிப்ரவரி 9) தொடங்கியது. 2 நாள் நடைபெற்ற இந்த விழாவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். கல்லூரியின் நாகசுரம், தவில் துறை மாணவா்கள் மங்கல இசை வாசித்தனா்.
விழாவில், சிறப்பு அழைப்பாளா்களாக நடனக் கலைஞா்கள் பிரியங்கா, ஜலதீபா சசிக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். தமிழிசை விழாவையொட்டி திங்கள்கிழமை இஞ்சிக்குடி இ.மு.மாரியப்பன் குழுவினரின் நாகசுர இசையும், நடனக் கலைஞா் மாதுளா கிஷோா்குமாரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அஜித் மேனன், அனீஸ் மேனன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் இசைக் கலைஞா்கள், முன்னாள், இந்நாள் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் சு.விஜயராகவன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


