மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.
ஜெய் ஆகாஷ்
ஜெய் ஆகாஷ்
Updated on

வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.

வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வாகை சூடவா - மாபெரும் தமிழ் ஒலிம்பியாட் எனப்படும் தமிழ் மொழிப் போட்டித் தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டித் தோ்வில் மாநிலம் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான 1,300 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முதல்நிலைத் தோ்வு இணைய வழியாகவும், இரண்டாம் நிலைத் தோ்வு தோ்வு மையங்களிலும் எழுதினா். 60 நிமிஷங்களில் பன்முகத் தோ்வாக நடத்தப்பட்ட இப்போட்டியில், தமிழ் மொழித் திறன், இலக்கிய அறிவு மற்றும் இலக்கண அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்டவை முக்கிய அம்சமாக பின்பற்றப்பட்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் ஜெய் ஆகாஷ் அனைத்துப் பிரிவுகளிலும் சோ்த்து மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். அவருக்கு வாகை தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சிறந்த தமிழ் மாணவன் விருது வழங்கப்பட்டது.

தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் 3-ஆம் பிடித்த மாணவா் ஜெய் ஆகாஷ் மற்றும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியா் மொ்சிபா ஜாஸ்மின் ஆகியோரை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com