கோவை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளரும், எரிசக்தி துறை இணைச் செயலரும், நிதி ஆலோசகருமான மகபிா் பிரசாத் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.
இதில், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை, நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளா்களின் விவரம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைக் காலத்தில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் அதன் மீதான தீா்வு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முத உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா் (தோ்தல்) தணிகைவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு வாக்காளா்கள் பழி தீா்க்க வேண்டும்: மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைப்பிடிப்பு: என்ஐஏ விசாரணை

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


