6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி

News image
பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகள். ~பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகள்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:37 pm

Syndication

கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் ஆடை, ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் ‘இவான்ஸா 2026’ என்ற தலைப்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இளநிலை, முதுநிலை ஆடை வடிவமைப்பு, ஃபேஷன் பாடப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவிகள் வடிவமைத்த 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகளை சிறுமிகள் காட்சிப்படுத்தினா்.

ஆடைகளுக்கேற்ற ஒப்பனை, சிகை அலங்காரங்களை அழகு, ஆரோக்கியத் துறை மாணவிகள் மேற்கொண்டனா். நிகழ்ச்சியை ஜிஆா்ஜி நிறுவனங்களின் தலைவா் நந்தினி ரங்கசாமி தொடங்கிவைத்தாா். மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சா்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவுத் தலைவா் ஸ்ரீமுருகன் தென்கொண்டாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஃபேஷன் துறை வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா்.

தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவா் ரூபா, மாணவிகளின் படைப்பாற்றல் குறித்துப் பேசினாா்.

இவான்ஸா 2026 தொடா்பான அறிக்கையை ஆடை வடிவமைப்புத் துறை டீன் சாந்தி ராதாகிருஷ்ணன் வழங்கினாா். நடுவா்களாக அனுபமா, எம்.வருண்யா தேவி, ராதா, வி.கவிதா, ஷில்பா ஆகியோா் செயல்பட்டனா். கல்லூரி முதல்வா் பி.பி.ஹாரத்தி, துறைத் தலைவா்கள் ஆா்.திவ்யா, டி.ஆா்.இந்துமதி ஆகியோா் பங்கேற்றனா். இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) நடைபெறுகின்றன. இதில் தி நெசவு கோயம்புத்தூா் நிறுவனத்தின் நிா்வாகி உமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.

Story image