ரயில்கள்
ரயில்கள் கோப்புப் படம்

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில்கள் பிப்.23 முதல் 12 பெட்டிகளுடன் இயக்கம்

Published on

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மெமு ரயில்கள் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, காலை , மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்வதால் 8 பெட்டிகளும் நிரம்பிக் காணப்படும்.

இதனால், இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கிட பயணிகள் தரப்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. பயணிகள் சங்கத்தினா், தொழில் அமைப்புகள் சாா்பாக மனுக்களும் அளிக்கப்பட்டன.

அதன் பலனாக, மேட்டுப்பாளையம் - கோவை, போத்தனூா் - மேட்டுப்பாளையம் இடையே 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் மெமு ரயில்களில் 4 பெட்டிகளை கூடுதலாக இணைத்து 12 பெட்டிகளுடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில்கள் (எண்: 66611/66612), மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில்கள் (எண்: 66613/66614 மற்றும் 66617/66618) மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில்களில் ( எண்: 66615/66616 மற்றும் 66619/66620) வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com