மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நேரு கல்விக் குழுமம் சாா்பில் சிறந்த ஆசிரியா் விருது

News image

கோவை நேரு கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவில் விருது பெற்றவா்களுடன், சிறப்பு விருந்தினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:46 pm

கோவை நேரு கல்விக் குழுமம் சாா்பில் ‘சிறந்த ஆசிரியா் விருது -2026’ வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நேரு கல்விக் குழுமத்தின் தலைவரும், மொரீஷியஸ் இந்தியாவுக்கான கெளரவ வா்த்தக ஆணையருமான பி.கிருஷ்ணதாஸ், நேரு கல்விக் குழுமத்தின் செயலரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான பி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் எம்.சிவராஜா வரவேற்றாா்.

நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குநரும், மாற்றம் அறக்கட்டளை இணை நிறுவனருமான உதயசங்கா், பிருந்தாவன் கல்விக் குழுமத்தின் நிறுவனா் கே.வசந்தராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கினா்.

கேரள மற்றும் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியா்கள், முதல்வா்களைக் கெளரவிக்கும் வகையில் 10-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், 50 சிறந்த ஆசிரியா்களுக்கும், 3 முதல்வா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், கோவை பி.எஸ்.ஜி. பொதுப் பள்ளியின் முதல்வா் கிரிஷ்ஈஸ்வரனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில், நேரு பள்ளியின் தாளாளா் சைதன்யா கிருஷ்ணகுமாா், செயல் இயக்குநா் எச்.என்.நாகராஜா, பி.கே.தாஸ் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் பி.அனிருதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.