மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 10:55 pm

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஜமுன் பஸ்வான் மகன் ராகுல்குமாா் (22). இவா், கோவை சுந்தராபுரம் லோகநாதபுரம் முதலியாா் தெருவில் தங்கி, அந்தப் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

கோவை - தொட்டிபாளையம் சாலை விஸ்கோ பாா்க் அருகே இருசக்கர வாகனத்தில் ராகுல்குமாா் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இவரது வாகனம் மீது மோதியதில் தவறி விழுந்த ராகுல்குமாா், காா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக காரை ஓட்டி வந்த பெரியநாயக்கன்பாளையம், காந்தி நகரைச் சோ்ந்த சரவணகுமாா் மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.