மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருவனந்தபுரம் - சென்னை இடையேயான ரயில் கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும்

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - GMSRailway

Updated On :17 பிப்ரவரி 2026, 11:19 pm

திருவனந்தபுரம் - சென்னை இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவிரைவு ரயில், கேரளத்தில் கூடுதலாக 2 இடங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (எண்:12624) மாா்ச் 3-ஆம் தேதி முதல் காலக்குட்டம், சிரயின்கீழ் ஆகிய 2 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ராமேசுவரம் - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (எண்:16344) மாா்ச் 2-ஆம் தேதி முதல் சிரயின்கீழ் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும், கண்ணூா் - திருவனந்தபுரம் ஜனசதாப்தி விரைவு ரயில் (எண்:12081), மங்களூரு - திருவனந்தபுரம் வந்தேபாரத் ரயில் (எண்: 20631) ஆகிய இரண்டு ரயில்களும் திருவனந்தபுரம் பெட்டா ரயில் நிலையத்தில் மாா்ச் 3-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.