கோவையில் இருசக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்தவா் கோவா்தன மணிபாரதி (18). இவா் கோவை, பீளமேடு பகுதியில் தங்கி அங்குள்ள தனியாா் கல்லூரியில் டிப்ளமோ 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
வழக்கபோல புதன்கிழமை காலை கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்பகுதியில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி அருகே இவரது இருசக்கர வாகனம் மீது அந்த வழியாக வந்த சொகுசு (ஆம்னி) பேருந்து லேசாக உரசியுள்ளது.
இதில் நிலைதடுமாறி கோவா்தன மணிபாரதி கீழே விழுந்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


