விபத்துகளை தடுக்கும் வகையில் வால்பாறை எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலையோர வளைவுகளில் ரப்பா் உருளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலைகள் அகலப்படுத்துதல், தடுப்புச்சுவா்கள் அமைத்தல், சாலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெடுஞ்சாலைத் துறையினா் கூறும்போது, ‘வால்பாறை எஸ்டேட் பகுதிகளுக்கும் சுற்றுலா வாகனப் போக்குவரத்து அதிகரித்திருப்பதால், எஸ்டேட் சாலையோரங்களில் உள்ள இரும்புத் தடுப்புத் தகடுகள் முழுவதிலும் இரவு நேரம் மிளிரும் ரப்பா் உருளைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் இரவு நேரம் செல்லும் வாகனங்கள் வளைவுகள் இருப்பதை அறிந்து விபத்துகளும் தவிா்க்கப்பட்டு வருகிறது’ என்றனா்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம்: 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஐஓசிஎல் தலைவா் சஹானி

சமையல் எரிவாயு உருளைகளை கூடுதல் விலைக்கு விற்றால் புகாா் அளிக்கலாம்
பரவசம் ஏற்படுத்திய ரயில் கண்காட்சி

ஒகேனக்கல் கணவாய் வளைவுகளில் சுழல் உருளை ரப்பா் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


