கோவை அருகே இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாவட்டம், துடியலூா் வட்டமலைப்பாளையம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகேயுள்ள காலி இடத்தில் தீயில் எரிந்த நிலையில் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் புதன்கிழமை கண்டுள்ளனா்.
இதையடுத்து, அவா்கள் துடியலூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், கருகிய நிலையில் கிடந்தது சுமாா் 23 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம். அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் முழுவதும் எரிந்துள்ளது. தலையில் ரத்தக் காயங்கள் உள்ளன. சிவப்பு நிற உடை அணிந்திருந்துள்ளாா். அப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு கொண்டுவரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம். உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றனா்.
தொடர்புடையது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

ஆட்டோ தீ வைத்து எரிப்பு

போட்டித் தோ்வு மையத்துக்கு சென்ற இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


