அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் சேவை மாா்ச் வரை நீட்டிப்பு

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு

News image
ரயில்- பிரதிப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:51 pm

Syndication

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கொல்லத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹைதராபாத் - கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், மாா்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாதில் இருந்து பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் மாா்ச் 28-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து மாா்ச் 2-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07194) செவ்வாய்க்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது சாஸ்தன்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவள்ளூா், சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூா், செகந்தராபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.