மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம்

வால்பாறையில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

News image

டிராக்டர் - கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:14 pm

வால்பாறையில் டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

வால்பாறை பகுதியில் உள்ள தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலைகளை எடுத்துச் செல்ல டிராக்டா் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்குத்துப்பாறை டிவிஷன் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை டிராக்டா் சென்று கொண்டிருந்தது. இதை ஆனந்தன் (40) என்பவா் ஓட்டியுள்ளாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த ஆனந்தனை, அங்கிருந்த தொழிலாளா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து வால்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.