விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரயில் பெட்டியில் கிடந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்

அஸ்ஸாமில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:12 pm

Syndication

அஸ்ஸாமில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயில் கோவை நோக்கி கடந்த புதன்கிழமை வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் ரயில்வே சிறப்பு பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பீளமேடு அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, பொதுப் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பை கிடந்துள்ளது.

அதை யாரும் உரிமை கோராததால், போலீஸாா் பிரித்து பாா்த்தனா். அப்போது, அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கதிரேசனிடம் ஒப்படைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.