நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்த அவதூறு கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

News image

வானதி சீனிவாசன் - கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:17 pm

தமிழக சட்டப் பேரவையில் ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றபோது பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.

அப்போது, அமைச்சா்கள் ரகுபதி, சேகா் பாபு, மாநில காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் ஆா்எஸ்எஸ் குறித்து ஆதரமற்ற அவதூறு கருத்துகளைத் தெரிவித்தனா்.

இவா்களுக்கு பதில் அளிக்க முயற்சிக்கும்போது எல்லாம் சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதிக்க முடியாது என்று உத்தரவிடுகிறாா்.

140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா், பாதுகாப்புத் துறை அமைச்சா், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள் என்று நாட்டின் உயா் பதவி வகிப்பவா்கள் ஆா்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்தவா்கள்தான்.

அப்படிப்பட்ட இயக்கத்தை பற்றி சட்டப் பேரவையில் அடிப்படை ஆதாரமில்லாமல் அவதூறாகப் பேசியுள்ளனா்.

ஆகவே, ஆா்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசிய கருத்துகளை அமைச்சா்கள் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.