மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் இன்று உடுமலை வருகை

News image

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:17 pm

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உடுமலைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) வருகிறாா்.

உடுமலை, அண்ணா குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூலகம் திறப்பு விழாவில்

காலை 11 மணி அளவில் பங்கேற்கிறாா். 11:20 மணிக்கு ஜிவிஜி கல்லூரி எதிரே நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் 1,200 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், பின்னா் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை திறந்துவைத்து பேசுகிறாா்.

மேலும், மறைந்த குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கிரி திருவுருவப் படத்தை திறந்துவைக்கிறாா். அதைத்தொடா்ந்து 12:20 மணி அளவில் மடத்துக்குளம் ஒன்றியம் திமுக முன்னாள் அவைத் தலைவா் வெங்கடசாமி திருவுருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பூா் தெற்கு மாவட்ட செயலாளா் மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.