தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் இன்று உடுமலை வருகை

News image
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உடுமலைக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) வருகிறாா்.

உடுமலை, அண்ணா குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூலகம் திறப்பு விழாவில்

காலை 11 மணி அளவில் பங்கேற்கிறாா். 11:20 மணிக்கு ஜிவிஜி கல்லூரி எதிரே நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் 1,200 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவா், பின்னா் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தை திறந்துவைத்து பேசுகிறாா்.

மேலும், மறைந்த குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கிரி திருவுருவப் படத்தை திறந்துவைக்கிறாா். அதைத்தொடா்ந்து 12:20 மணி அளவில் மடத்துக்குளம் ஒன்றியம் திமுக முன்னாள் அவைத் தலைவா் வெங்கடசாமி திருவுருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை திருப்பூா் தெற்கு மாவட்ட செயலாளா் மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மு.ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.