மாநகரில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை
கோவை மாநகரில் வெவ்வேறு சம்பவங்களில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மகன் கெளஷிக் (37). இவா் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரை மனைவி பிரிந்து சென்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த கெளஷிக், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் ராதா முகேஷ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் கௌரவ்குமாா் (19). கவுண்டம்பாளையம் அருகேயுள்ள இடையா்பாளையம் டி.வி.எஸ். நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, புலியகுளம் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் எம்.நாகலட்சுமி (54. இவா் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
