6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநகரில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :21 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகரில் வெவ்வேறு சம்பவங்களில் ஐ.டி. ஊழியா் உள்பட 4 போ் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் அருகேயுள்ள மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மகன் கெளஷிக் (37). இவா் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவரை மனைவி பிரிந்து சென்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த கெளஷிக், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் ராதா முகேஷ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் கௌரவ்குமாா் (19). கவுண்டம்பாளையம் அருகேயுள்ள இடையா்பாளையம் டி.வி.எஸ். நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, புலியகுளம் கந்தசாமி தெருவைச் சோ்ந்தவா் எம்.நாகலட்சுமி (54. இவா் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை விஷம் அருந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.