அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோபிராஜன் (64). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை-திருச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, மதுரையைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் ஓட்டி வந்த கான்கிரீட் கலவை லாரி கோபிராஜனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா் ராஜ்குமாா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா், தப்பியோடிய ராஜ்குமாரைத் தேடி வருகின்றனா்.