கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக மக்களைத் தேடி மருத்துவ ஊழியா் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக ஊதியமாக உயா்த்தி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியா்களுக்கு ஆண்டுக்கு 2 சீருடைகள் வழங்க வேண்டும். தன்னாா்வலா்கள் என்ற பெயரை மாற்றி சுகாதாரத் துறை பணியாளா்கள் என்று அழைக்க வேண்டும். அரசு விடுமுறை வழங்க வேண்டும். மகப்பேறு கால விடுப்பு வழங்குவதுடன், பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றனா்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்களைத்தேடி மருத்துவத் திட்ட பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


