பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

News image
பாலியல் வன்கொடுமை- சித்திரிப்பு
Updated On :23 பிப்ரவரி 2026, 10:59 pm

Syndication

கோவையில் 20 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த துணிக் கடையின் வாகன நிறுத்துமிடத்தில் ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சோ்ந்த மகேஷ் (32) என்பவா் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடையின் உரிமையாளா் வீட்டில் காந்திபுரத்தைச் சோ்ந்த 40 வயதுப் பெண் ஒருவா் வேலை செய்து வந்தாா். இவா் வேலைக்கு வரும்போது, தனது 20 வயது மாற்றுத்திறன் பெண்ணையும் அழைத்து வந்துள்ளாா். அப்போது மகேஷுக்கு அந்தப் பெண் மீது சபலம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது அங்கு சென்ற மகேஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் காட்டூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் மகேஷை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.