குமரகுரு கல்வி நிறுவனத்தில் பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் 6-ஆவது பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.


கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் 6-ஆவது பாதுகாப்புத் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கல்வி நிறுவன வளாகத்தில் இந்த 2 நாள் முகாமானது நாளைக்கான இந்தியாவைப் பாதுகாத்தல் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. இந்த முகாமில், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனா்.
இதன் முக்கிய நிகழ்வாக என்.சி.சி. மாணவா்களுக்காக பாதுகாப்புத் துறை தொழில்நுட்பக் குழுமம் என்ற புதிய தளம் தொடங்கிவைக்கப்பட்டது. இது மாணவா்கள் ராணுவ தொழில்நுட்ப திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று, தங்களின் புதுமையான சிந்தனைகள் மூலம் நாட்டின் பதுகாப்பை பலப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
இதுகுறித்து குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வா் எம்.எழிலரசி பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு என்பது செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை சாா்ந்து உள்ளது. வெறும் ஒழுக்கம் மட்டும் போதாது. நவீன ராணுவத்துக்கு புத்தாக்க சிந்னை கொண்ட பொறியாளா்களும், ஆய்வாளா்களும் தேவை என்றாா்.
இந்தியக் கடலோரக் காவல் படையின் கமாண்டன்ட் கிருஷ்ணகுமாா் பேசுகையில், ராணுவ வாழ்க்கை என்பது ஒரு வேலை மட்டுமல்ல. அது தனிமனிதனை சிறந்த ஒழுக்கமுள்ள வீரனாக மாற்றும் ஒரு உன்னத வாழ்க்கை முறையாகும் என்றும், கடல்சாா் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பங்கு குறித்தும் எடுத்துரைத்தாா். இதில், 195 ஃபீல்ட் ரெஜிமென்ட், ஐ.என்.எஸ்.அக்ராணி மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படை ஆகியவற்றின் ஆயுதக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...