மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞா் கைது

கோவையில் அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2026, 7:21 pm

கோவையில் அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவை - அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் ஒருவா் சொகுசு காரை ஓட்டி வந்துள்ளாா். அப்போது, அங்குள்ள தனியாா் கல்லூரி முன்பு தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு கூச்சலிட்டாா். தொடா்ந்து அந்த காரை முன்னும், பின்னும் இயக்கி அருகில் இருந்த வாகன ஓட்டிகள் மீது மோதுவதுபோல அச்சத்தை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றாா். இதுகுறித்து கேட்ட பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனா். மேலும், தங்களிடம் இருந்த ஹெல்மெட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு காா் கண்ணாடியை உடைத்தனா். இதனால் ஆவேசமடைந்த அந்த நபா், சாலையில் நிறுத்திய தனது காா் மீது ஏறி நின்று அங்கிருந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தாா். ஒரு கட்டத்தில் அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கினா்.

தகவல் அறிந்து பீளமேடு போலீஸாா் சென்று காயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த ஆண்டனி (35) என்பது தெரியவந்தது. அவரை கைது காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, திருமணமான ஆண்டனி மீது அவரது மனைவி சில மாதங்கள் முன்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை, துன்புறுத்தல் தொடா்பான புகாரை அளித்துள்ளாா் என்றனா்.

இதைத்தொடா்ந்து கோவை மத்திய சிறையில் ஆண்டனி அடைக்கப்பட்டாா்.