கோவையில் அவிநாசி சாலையில் காரை நிறுத்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை - அவிநாசி சாலை, பீளமேடு பகுதியில் திங்கள்கிழமை இரவு இளைஞா் ஒருவா் சொகுசு காரை ஓட்டி வந்துள்ளாா். அப்போது, அங்குள்ள தனியாா் கல்லூரி முன்பு தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு கூச்சலிட்டாா். தொடா்ந்து அந்த காரை முன்னும், பின்னும் இயக்கி அருகில் இருந்த வாகன ஓட்டிகள் மீது மோதுவதுபோல அச்சத்தை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றாா். இதுகுறித்து கேட்ட பொதுமக்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றனா். மேலும், தங்களிடம் இருந்த ஹெல்மெட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு காா் கண்ணாடியை உடைத்தனா். இதனால் ஆவேசமடைந்த அந்த நபா், சாலையில் நிறுத்திய தனது காா் மீது ஏறி நின்று அங்கிருந்த மக்களுக்கு மிரட்டல் விடுத்தாா். ஒரு கட்டத்தில் அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கினா்.
தகவல் அறிந்து பீளமேடு போலீஸாா் சென்று காயமடைந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த ஆண்டனி (35) என்பது தெரியவந்தது. அவரை கைது காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறும்போது, திருமணமான ஆண்டனி மீது அவரது மனைவி சில மாதங்கள் முன்பாக கருமத்தம்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வரதட்சனை கொடுமை, துன்புறுத்தல் தொடா்பான புகாரை அளித்துள்ளாா் என்றனா்.
இதைத்தொடா்ந்து கோவை மத்திய சிறையில் ஆண்டனி அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
கமுதியில் 8 கிலோ கஞ்சாவுடன் இளைஞா் கைது
அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தியதாக சிறுவன் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

