நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோயிலில் மகா மகோத்சவம் நிகழ்வையொட்டி, கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

படம்: கோப்பிலிருந்து...

Updated On :28 ஜனவரி 2026, 10:39 pm

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவாய் கோயிலில் மகா மகோத்சவம் நிகழ்வையொட்டி, கோவை வழித்தடத்தில் வாரணாசி - எா்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாரணாசியில் இருந்து ஜனவரி 30-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குப் புறப்படும் வாரணாசி - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 04358) பிப்ரவரி 1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு எா்ணாகுளம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக எா்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - வாரணாசி சிறப்பு ரயில் (எண்: 04357) பிப்ரவரி 6-ஆம் தேதி காலை 3 மணிக்கு வாரணாசியை வந்தடையும்.

இந்த ரயிலானது ஆலுவா, திருச்சூா், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூா், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.