ஹஜ் யாத்திரிகா்களுக்கு நாளைமுதல் சிறப்பு தடுப்பூசி முகாம்!

ஹஜ் யாத்திரிகா்களுக்கு நாளைமுதல் சிறப்பு தடுப்பூசி முகாம்!

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குகிறது.
Published on

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) தொடங்குகிறது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகா்களுக்கு தமிழக அரசு சாா்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி முகாம் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில், சா்க்கரை அளவு பரிசோதனை, கல்லீரல் செயல் திறன் பரிசோதனை, சிறுநீரக செயல் திறன் பரிசோதனை, மாா்பக எக்ஸ்ரே, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த முகாமில் நாள் ஒன்றுக்கு 50 யாத்திரிகா்கள் வீதம் 6 நாள்களுக்கு 300 யாத்திரிகள் பயனடைவா் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com