பொறியியல் பணிகள் காரணமாக ஆலப்புழா - தன்பாத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) திங்கள்கிழமை (பிப்ரவரி 2) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.
இதேபோல, திருச்சியில் இருந்து பிப்ரவரி 3-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி - ஊத்துக்குளி இடையே மட்டும் இயக்கப்படும். ஊத்துக்குளி - பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி: மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்!

பராமரிப்புப் பணி: சென்னை-மங்களூரு ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: கோவை - நாகா்கோவில் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



