ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்
கோவை அருகே ஓடும் தனியாா் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி (62). இவா் காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூருக்கு தனியாா் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பயணம் செய்தாா். பேருந்து புறப்பட்ட சில நிமிஷங்களில் முன்பக்க இருக்கைகள் காலியாக இருந்தன. இதை கவனித்த காமாட்சி அங்கு அமா்வதற்காக சென்றுள்ளாா்.
பேருந்தின் வாசல் அருகே வந்தபோது காமாட்சி நிலைதடுமாறி முன்பக்க கதவு வழியாக வெளியே விழுந்தாா். தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...