ஆகஸ்ட் 8-இல் திராவிட இயக்க கருத்தரங்கு தொடக்கம்

ஈரோட்டில் மதிமுக சார்பில், திராவிட இயக்கக் கருத்தரங்கு ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.
Updated on
1 min read

ஈரோட்டில் மதிமுக சார்பில், திராவிட இயக்கக் கருத்தரங்கு ஆகஸ்ட் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.

ஈரோடு, பழையபாளையம் குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் இளைஞர்களைத் தேர்வு செய்யும் முகாம் ஈரோடு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு, ஈரோடு மாவட்ட மதிமுக செயலர் அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணிச் செயலர் வே.ஈஸ்வரன், மாணவர் அணிச் செயலர் தி.மு.ராஜேந்திரன், தொண்டர் அணி இயக்குநர் சு.ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று இளைஞர்களை தேர்வு செய்தனர்.

இதில், தேர்வு செய்யப்பட்ட 300 இளைஞர்களுக்கு பேராசிரியர்கள் ஹென்றி திபேன், பொறியாளர் ஈழவாளேந்தி, வந்தியதேவன், பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் 2 நாள்கள் பயிற்சி அளிக்கின்றனர். இரு நாள்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் வைகோ பங்கேற்கிறார்.

இம்முகாமில், ஈரோடு மாநகரச் செயலர் பொன்னுசாமி, மாநில இளைஞர் அணி துணைச் செயலர் செல்வராஜ், மாணவர் அணி துணைச் செயலர் முகமது சாதிக், தொண்டர் அணி மாநில துணைச் செயலர் முசிறி ரவிசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com