ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஈரோடு கலைக் கல்லூரியில் சதுரங்க விளையாட்டு சங்கம் தொடக்கம்

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சதுரங்கக் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:02 am

DIN

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சதுரங்கக் கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாணவ, மாணவிகளின் நினைவாற்றலைத் தூண்டவும்,  சிந்தனையை மேம்படுத்தும் நோக்கிலும் நடைபெற்ற இவ்விழாவுக்கு,  கல்லூரி முதல்வர் இரா.வெங்கடாசலம் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில சதுரங்க விளையாட்டுப் பயிற்சியாளர் மற்றும் நடுவர் செந்தில்குமார் பங்கேற்று சதுரங்கக் கழகத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகையில்,  "சதுரங்க விளையாட்டில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு  உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனஅழுத்தத்தை குறைக்க இப்பயிற்சியை பெற்று மாணவ மாணவிகள் பயனடைய வேண்டும்' என்றார்.
கல்லூரி சதுரங்கக் கழகம் மூலம் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனிப்பயிற்சி அளிக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பேராசிரியர் பி.சத்யா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.