மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மாவட்ட தடகளப் போட்டி: ஈங்கூர் யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

மாவட்ட  அளவிலான தடகளப் போட்டியில்  பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

Updated On :24 ஜூலை 2018, 12:43 am IST

மாவட்ட  அளவிலான தடகளப் போட்டியில்  பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தேசிய தடகள விளையாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் ஈரோட்டில் அண்மையில்  நடைபெற்றது. இப்போட்டியில் 1000- க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.  
இதில், ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளியைச் சேர்ந்த சௌபாக்யா குழந்தைவேலு 100 மீ தடை ஓட்டம்,  மும்முறை நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும்,  சித்ரசேனாநேருகஸ்தூரி, குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கமும்,  ஸ்ருதி,  100 மீ தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், சசிதரன்தங்கமுத்து ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 
அகில்ஆதித்யா,  நந்தனா தினேஷ்,  ஆதிஷ்கிருஷ்ணா ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் துரித நடைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரும் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடைபெறும் மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட  விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். 
பள்ளித் தலைவர் இளங்கோ ராமசாமி,  முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் பாராட்டினர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.