மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
தேசிய தடகள விளையாட்டுத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 1000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், ஈங்கூர் தி யுனிக் அகாதெமி பள்ளியைச் சேர்ந்த சௌபாக்யா குழந்தைவேலு 100 மீ தடை ஓட்டம், மும்முறை நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், சித்ரசேனாநேருகஸ்தூரி, குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஸ்ருதி, 100 மீ தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், சசிதரன்தங்கமுத்து ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
அகில்ஆதித்யா, நந்தனா தினேஷ், ஆதிஷ்கிருஷ்ணா ஆகியோர் மாநில அளவில் நடைபெறும் துரித நடைப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், வரும் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடைபெறும் மாநில தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
பள்ளித் தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமையவள்ளி இளங்கோ மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்தால் மட்டும் போதுமா?

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


