கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

64 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2018, 7:37 pm

DIN

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் நடைபெற்ற முகாமில், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 221 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. கோரிக்கை மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
இதில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஓய்வூதியம், இயற்கை மரண உதவித் தொகையாக 64 பயனாளிகளுக்கு ரூ. 1.50 லட்சத்துக்கான உதவிகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.