சாலை விபத்தில் இருவர் பலி

கோபி அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
Updated on
1 min read


கோபி அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
கோபி அருகே கணக்கம்பாளையம் சின்னகாளியூரைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் தங்கராஜ் (27). இவர் அந்தப் பகுதியில் ஆட்டோ வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். கள்ளிப்பட்டி சின்னகாளியூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ரமேஷ் (34). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனர். கள்ளிப்பட்டி - சின்னகாளியூர் செல்லும் வழியில் பிரபுகுமார் தியேட்டர் அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனதால் நிலைதடுமாறி சாலையின் இடது புறத்தில் இருந்த இரும்பு மின் கம்பத்தில் மோதியது. இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் 108 அம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். சிகிச்சைக்கு சேர்த்து சிறிது நேரத்திலேயே தங்கராஜ் என்பவரும் உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாபுதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com