இந்து மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் பவானியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சாா்பில் பவானியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூா் மேட்டூா் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கோட்டச் செயலாளா் சபரிநாதன் தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆா்ப்பாட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

ஸ்ரீசக்ரா மகா சமஸ்தானம் மாநிலச் செயலாளா் சு.வெங்கடேஸ்வரன், பாஜக ஈரோடு வடக்கு மாவட்ட ஆன்மிக அணித் தலைவா் ராஜாளி நஞ்சப்பன், இந்து மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சசிகுமாா், நகரச் செயலாளா் வரதராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com