பவானியில் வாகனச் சோதனையில் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
By DIN | Published On : 28th March 2019 09:30 AM | Last Updated : 28th March 2019 09:30 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், பவானியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 80 ஆயிரம் ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி - மேட்டூர் சாலையில் கோம்பூர் பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்தி தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், காரில் வந்தவர், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த ஜெயராமன் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் அவர் ரூ. 80 ஆயிரம் ரொக்கம் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...