டாஸ்மாக் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 05th May 2019 03:43 AM | Last Updated : 05th May 2019 03:43 AM | அ+அ அ- |

கோபி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரொக்கம் எரிந்து நாசமாகின.
கோபி, நம்பியூர் அருகே உள்ள கோசனம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த கடையில் வெள்ளிக்கிழமை இரவு கடை விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர் செல்வம் ஆகியோர் விற்பனை செய்த தொகை ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்தை கடையினுள் வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் இருப்பு இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் விற்பனையாளர்கள் கடையை திறந்தபோது மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையினுள் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள், ரொக்கம் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...