பவானி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
By DIN | Published On : 15th May 2019 07:27 AM | Last Updated : 15th May 2019 07:27 AM | அ+அ அ- |

பவானி ஆற்றில் மூழ்கி மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பவானியை அடுத்த அத்தாணி அருகே பவானி ஆற்றில் தங்கவேல் தோட்டம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து, அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
உயிரிழந்த மூதாட்டி குறித்த விவரங்கள் தெரியவில்லை. சிவப்பு நிறத்தில் ஜாக்கெட்டும், ஊதாப்பூ நிறத்தில் புடவையும் அணிந்திருந்தார். ஆற்றில் குளிக்க வந்தவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.