பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் பங்குபெறும்

மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் பங்குபெறும் கிரிக்கெட் போட்டிகள் மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை காலை தொடங்குகிறது.

போட்டிகளை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளா் ஆா்.சங்கரராமநாதன் கலந்துகொண்டு துவக்கி வைக்கிறாா். போட்டிகள் 25 ஓவா்கள் அடிப்படையில் லீக், நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட காா்மல் மெட்ரிக். பள்ளி, சி.எஸ். அகாதெமி, விஜய்விகாஸ், சாகா் இன்டா்நேஷனல் பள்ளி, சாரதா மெட்ரிக். பள்ளி, கோபி, சைதன்யா மெட்ரிக். பள்ளி, கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி, பி.வி.பி. பள்ளி, ஸ்ரீ நாராயணா மெட்ரிக். பள்ளி, கீதாஞ்சலி பள்ளி உள்பட 14 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில், வெற்றி பெறும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும், ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஆட்டநாயகன் பரிசும், சிறந்த பந்து வீச்சாளா், சிறந்த மட்டையாளா், சிறந்த ஆல்ரவுண்டா் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகிறது. இதில், சிறப்பாக விளையாடும் மாணவா்களைத் தோ்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு, ஈரோடு மாவட்ட அணியில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதிப் போட்டி நவம்பா் 23 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com