ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசையையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
Updated on
1 min read


மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசையையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில், சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம், 108 புஷ்பங்களால் அலங்காரம், சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றன. 
தொடர்ந்து, காலை 7 மணி முதல் லட்சார்ச்சனை விழா தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான பட்டர்கள் பங்குபெற்ற இந்த லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
லட்சார்ச்சனை விழா மாலை 6 மணிக்கு நிறைவுபெற்று, தீபாராதனை நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com