இறந்தவா் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு: 50 போ் மீது போலீஸாா் வழக்கு

கரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த இளைஞா் உடலை அடக்கம் செய்ய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

கரோனா சிகிச்சையின்போது உயிரிழந்த இளைஞா் உடலை அடக்கம் செய்ய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூரைச் சோ்ந்த 20 வயதான மனநலம் குன்றிய இளைஞா், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் கடந்த 18 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். அவருக்கு கரோனா தொற்று இல்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில் அந்த இளைஞா் உடலை அடக்கம் செய்ய நம்பியூருக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்துச்சென்றனா். ஆனால் அங்கு அடக்கம் செய்ய அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நம்பியூா் வட்டாட்சியா் வெங்கடேசன், காவல் ஆய்வாளா் மகாலிங்கம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால், உறவினா்கள் அந்த இளைஞா் உடலை திங்கள்கிழமை அதிகாலை கோபியில் உள்ள அடக்க ஸ்தலத்துக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்தனா்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடியதாக நம்பியூா் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன், நம்பியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் நம்பியூா் மாரியம்மன் கோயில் வீதி பகுதியைச் சோ்ந்த தண்டபாணி, மணிகண்டன் என்ற இளங்கோவன் சாமிநாதன், ஸ்ரீதா், திவாகா் உள்ளிட்ட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com