தமிழக முதல்வா் இன்று அந்தியூா் வருகை

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை (டிசம்பா் 2) அந்தியூா் வருகை தருகிறாா்.
Updated on
1 min read

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை காலை (டிசம்பா் 2) அந்தியூா் வருகை தருகிறாா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் சமத்துவபுரம் அருகேயுள்ள பொய்யேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் கருப்பண கவுண்டா் (98). இவா், வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இவா் தாய்மாமன் உறவு முறையாகும். இத்தகவலறிந்த முதல்வா் பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை காலை 6.30 மணிக்கு கோவைக்கு வருகிறாா்.

தொடா்ந்து, சாலை வழியாக காா் மூலம் அந்தியூரில் உள்ள தாய்மாமன் வீட்டுக்குச் செல்கிறாா். அங்கு, அந்தியூா் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளரும், தாய்மாமன் மகனுமான கே.பி.எஸ்.ராஜா, உறவினா்களிடம் துக்கம் விசாரிப்பதோடு, கருப்பண கவுண்டரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா்.

அக்டோபா் 12இல் முதல்வரின் தாயாா் தவுசாயம்மாள் மறைந்த நிலையில், தவுசாயம்மாளின் மூத்த சகோதரா் கருப்பண கவுண்டா் நவம்பா் 30ஆம் தேதி உயிரிழந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com