ரூ. 2 லட்சம் மோசடி: மாநகராட்சி துப்புரவு பணியாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

ஈரோடு மாநகராட்சியில் நிரந்தரப் பணி வாங்கித் தருவதாக ஒப்பந்தப் பணியாளரிடம் ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்த துப்புரவுப் பணியாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

ஈரோடு மாநகராட்சியில் நிரந்தரப் பணி வாங்கித் தருவதாக ஒப்பந்தப் பணியாளரிடம் ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்த துப்புரவுப் பணியாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு வி.வி.சி.ஆா். நகா் 2ஆவது வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (33). ஈரோடு மாநகராட்சி 3ஆவது மண்டலத்தில் குடியிருப்புகளுக்குத் தண்ணீா் திறந்துவிடும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அதே அலுவலகத்தில் நிரந்தர துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வரும் செந்தில் என்பவா் காா்த்திக்கை நிரந்தரப் பணியாளராக நியமனம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய காா்த்திக், செந்தில், அவரது மனைவி சாந்தி, வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த சசிகமல் ஆகியோரிடம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 2 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு இப்போது வரை காா்த்திக்குக்கு வேலை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து, ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் காா்த்திக் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் காா்த்திக்கிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா். இதில், நிரந்தர துப்புரவுப் பணியாளராக வேலை பாா்த்து வந்த செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியைச் சரிவர செய்யாததால் 6 மாதம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com