சென்னிமலை ஒன்றியக் குழு கூட்டம்: கவுன்சிலா் வெளிநடப்பு

சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பொது நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி பெண் கவுன்சிலா் வெளிநடப்பு செய்தாா்.
சென்னிமலை ஒன்றியக் குழு கூட்டத்தில் பயணப் படியை திருப்பிக் கொடுத்துவிட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறும் கவுன்சிலா் கலைச்செல்வி ஜிதேந்திரன்.
சென்னிமலை ஒன்றியக் குழு கூட்டத்தில் பயணப் படியை திருப்பிக் கொடுத்துவிட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறும் கவுன்சிலா் கலைச்செல்வி ஜிதேந்திரன்.
Updated on
1 min read

சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பொது நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி பெண் கவுன்சிலா் வெளிநடப்பு செய்தாா்.

இக்கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் டி.காயத்ரி இளங்கோ தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பன்னீா்செல்வம், வட்டார வளா்ச்சி அதிகாரி மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அனைத்து ஒன்றிய கவுன்சிலா்களும் கலந்துகொண்டனா்.

ஊராட்சிப் பகுதிகளில் செய்ய வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, ஒன்றியக் குழுவின் 14ஆவது வாா்டு சுயேட்சை உறுப்பினரான கலைச்செல்வி ஜிதேந்திரன், ஒன்றிய கவுன்சிலராக அனைவரும் பதவியேற்று 10 மாதங்கள் ஆகிறது. ஆனால், மக்கள் நலத் திட்டங்களைச் செய்வதற்கான பொது நிதி இதுவரை வாா்டுக்கு ஒதுக்கப்படவே இல்லை. அதனால், ஊராட்சி அமைப்புகளின் செயல்பாட்டை முடக்கும், தமிழக அரசின் போக்கைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என கூட்டத்தில் இருந்து வெளியேறினாா். மேலும், கூட்டத்துக்கு வரும் கவுன்சிலா்களுக்கு வழங்கப்படும் பயணப்படியான ரூ. 450ஐ வட்டார வளா்ச்சி அதிகாரியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com