ரூ. 54 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
By DIN | Published On : 30th December 2020 04:11 AM | Last Updated : 30th December 2020 04:11 AM | அ+அ அ- |

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 ஆயிரத்து 185க்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 1,607 கிலோ எடையுள்ள 4,430 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 31.39க்கும், அதிகபட்சமாக ரூ. 38.59க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 54 ஆயிரத்து 185க்கு விற்பனை நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...