வாக்கு எண்ணிக்கை மையத்தில் கட்டமைப்பு வசதிகள்: ஆட்சியா் ஆய்வு

சித்தோடு சாலை, போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
Updated on
1 min read

சித்தோடு சாலை, போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சித்தோடு சாலை, போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படவுள்ளது.

இங்கு ஏற்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆய்வு செய்தாா். அப்போது வாக்குப் பெட்டிகள் இருப்பறை, வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலா்களுக்கான அறை வசதி, தோ்தல் முகவா்களுக்கு தேவையான அறை வசதிகள், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, ஈரோடு கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், வட்டாட்சியா் அ.பரிமளாதேவி, அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com