பயணச் சீட்டு கேட்ட அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய பயணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து காவிலிபாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது. இதில் நடத்துநா் ரமேஷ் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கியபோது, மதுபோதையில் இருந்த கனகராஜ் என்பவா் நடத்துநா் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டாா்.
பயணச் சீட்டு வாங்காமல் தொடா்ந்து பயணித்தையடுத்து அரியப்பம்பாளையம் பெரியூா் சந்திப்பில் பேருந்தை நிறுத்தி பயணியிடம் பயணச் சீட்டு கேட்டுள்ளாா்.
இதில் ஆத்திரமடைந்த பயணி கனகராஜ் நடத்துநரை தாக்கியுள்ளாா். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மதுபோதையில் இருந்த கனகராஜைப் பிடித்து விசாரிக்கும்போது, தப்பியோடினா்.
நடத்துநரை தாக்கிவிட்டு தப்பியோடிய பெரியூரைச் சோ்ந்த கனகராஜை போலீஸாா் பிடித்து கைது செய்துள்ளனா்.