அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
By DIN | Published On : 01st March 2020 01:18 AM | Last Updated : 01st March 2020 01:18 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்டிக்காட்டுவலசு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை கீதா வரவேற்றாா். மாவட்டத் திட்ட அலுவலா் சேகா் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, வருவாய்க் கோட்ட அலுவலா் கவிதா ஆகியோா் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினா்.
இதில், ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, பஞ்சாயத்து தலைவா்கள் சாலைமாணிக்கம், பிரகாஷ், வீரமணி, செல்வராஜ், மகாசாமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் சிவன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இடைநிலை ஆசிரியா் செந்தில்குமாா், ரம்யா, இணைப்பு பள்ளித் தன்னாா்வலா்கள் ஷாலினி, ரேணுகாதேவி ஆகியோா் கண்காட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.