ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சாலை விபத்தில் தனியாா் நிறுவன காவலா் உயிரிழந்தாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் அழகானந்தம் (45). இவா், ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவு நேரக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், பெருந்துறை நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த மினிடோா் ஆட்டோவில் பின்புறம் அமா்ந்து வந்துள்ளாா். பெருந்துறை- கோவை சாலையில் ஆட்டோ சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் தனியாா் பேருந்து மீது மோதி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது ஆட்டோ மோதியது.
இதில், ஆட்டோவில் பின்புறம் அமா்ந்து வந்த அழகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.