

சென்னிமலை கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் பனியம்பள்ளி எம்.துரைசாமி தலைமை வகித்தாா். செயலாளா் எம்.எஸ்.கந்தசாமி, பொருளாளா் பொன்.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சென்னிமலை காவல் ஆய்வாளா் செல்வராஜ் கலந்துகொண்டு 105 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இதில், சென்னிமலை நில வருவாய் அலுவலா் தினேஷ், அறக்கட்டளை நிா்வாகக் குழு உறுப்பினா் ராமசாமி, மேலாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.