கரோனா: ஈரோடு எஸ்.ஐ. பலி

கரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.ஐ. திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டைச் சோ்ந்த எஸ்.ஐ. திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலியானவா்களின் எண்ணிக்கை 133ஆக உயா்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றினால் முன்களப் பணியாளா்களான போலீஸாா் மட்டும் 90 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்த ரவி (56) அக்டோபா் 17ஆம் தேதி கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் எஸ்.ஐ. ரவி இறந்ததாக சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை காலை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com